Gurudevar.org

இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!

இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!

ஞானாச்சாரியாரின் எழுத்துக்களிலிருந்து:

குருதேவர்
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் குருபாரம்பரிய வாசகங்களில் சில:-

பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம்: கி.மு.100 முதல் கி.பி.150 வரை



குருவாக்கியங்கள்

… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

தமிழனைத் தமிழனாக்குவது

‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

ஞானாச்சாரியார் கருத்துக்கள்

தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…

விரிவாகப் படித்திட...

இராமகிருட்டிணரியம்

இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.

விரிவாகப் படித்திட...

மணு தரும சாத்திரம்

அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - I

இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - II

சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - III

உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.

விரிவாகப் படித்திட...

இ.ம.இ. கௌரவத் தலைவர்

சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - IV

பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில், அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள்: ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.’

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - V

பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - VI

பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.

விரிவாகப் படித்திட...




கருத்துச் சொற்கள்

10வது-பதினெண்சித்தர்-பீடாதிபதி 2
caste-system 1
divine-healing 1
mystical-healing 1
theory-of-re-incarnation 1
அன்புச்-சேவுக 28
அமாவாசை-விரதம் 1
அரசயோகி 1
அரசியல்-புரட்சி 1
அரசியல்-மாற்றம் 1
அரசியல்-வரலாறு 1
அருட்கணிப்பு 1
அருட்சித்தருக்கு-அறிவுரை 1
அருட்பணி 1
அருட்புரட்சி 1
அருட்போர் 1
அருணகிரிநாதர் 1
அருளாட்சி-அமைப்பு 5
அருளாட்சி-ஆணைகள் 13
அருளாட்சிக்கு-அழைப்பு 1
அருளாளன் 1
அருளுரை 1
அருள் 1
அருள்வாக்கு 1
அவதாரம் 1
ஆசனம் 1
ஆதிசங்கரர் 10
ஆன்மீகம் 1
ஆரிய-மாயை 1
ஆலயம் 1
இ.ம.இ.-கொள்கைகள் 1
இந்திமொழி-வெறியர்கள் 1
இந்தியா 1
இந்தியாவின்-மதம் 1
இந்தியாவை-ஆளவேண்டிய-தத்துவம் 1
இந்து 1
இந்துத்-தத்துவம் 1
இந்துமத-ஆண்டு 1
இந்துமத-மூலநூல்கள் 1
இந்துமத-மூலவர்கள் 1
இந்துமதம் 18
இந்துவேத-மாநாடுகள் 1
இந்துவேதம் 2
இராசராச-சோழன் 2
இராசிவட்டக்-கருவூறார்கள் 1
இராமகிருட்டிணர்-பரம-அம்சர் 1
இராமன் 2
இறவாயாக்கை 1
இலக்கிய-வரலாறு 1
இளமுறியாக்-கண்டம் 1
உயிரணு 1
உருவ-வழிபாடு 1
உலக-அருளாளர்கள் 1
உலக-இனங்களின்-விடுதலை 1
உலக-மதங்கள் 2
உலக-வரலாறு 1
உலகமொழிகளின்-விடுதலை 1
ஊழ்வினை 1
எந்த-மானுடம்-இந்த-மானுடம் 3
ஏசுநாதர் 1
ஏட்டறிவு 1
ஏட்டுலகப்-புரட்சி 1
ஐந்தரம் 1
ஐயனார் 1
ஐயப்பன் 1
ஒற்றுமை 1
ஒளி-வணக்கம் 1
ஓகம் 1
ஓகாசனம் 1
கடவுளர்-வடிவம் 1
கடவுள் 1
கடவுள்மொழி 1
கருவூரார் 1
கருவூறார் 2
காகிதப்-போர் 1
காயத்திரி 5
காயந்திரி 7
காலக்-கணக்கீடு 1
காவல்-தெய்வம் 2
காவிரியாற்றங்கரைக்-கருவூறார் 1
கீதை 1
குமரிக்-கண்டம் 1
குரு 2
குருதிப்பலி 4
குருதேவர் 1
குருதேவர்-எழுதிய-கடிதங்கள் 1
குருதேவர்-யார் 14
குருபாரம்பரியம் 1
குருவாக்கியங்கள் 1
குருவாக்கு 1
குலதெய்வங்கள் 1
கோயில் 1
கோயில்-உயிர்ப்பு 1
கோயில்-நிருவாகம் 1
கோயில்-புத்துயிர்ப்பு 1
கோயில்-வழி-அருளாட்சி 1
சங்க-கால-இலக்கியங்கள் 1
சத்தி-இலிங்கம் 1
சத்தி-பீடங்கள் 1
சந்தானாச்சாரியார்கள் 1
சனாதன-தருமம் 1
சபரி 3
சமசுகிருதம் 1
சமய-மறுமலர்ச்சி 1
சமய-வரலாறு 1
சமுதாயத்-தத்துவம் 1
சமுதாயப்-புரட்சி 1
சாதிகள் 4
சித்தர்-ஏளனம்பட்டியார் 2
சித்தர்-கருவூறார் 2
சித்தர்-காகபுசுண்டர் 1
சித்தர்-நெறி 7
சித்தர்-மணு 1
சித்தாந்தம் 1
சித்தி 1
சிவ-இலிங்கம் 1
சிவநெறி 2
சிவராத்திரி 1
சிவாலயங்கள் 1
சுவாமி-கைவல்யம் 1
சேரர்கள் 1
சைவசமய-சித்தாந்தம் 1
சொல்லடி-நாயனார் 2
சோதிடம் 1
சோழநாடு 1
ஜாதிவெறி 1
ஞானக்காட்சி 1
ஞானாச்சாரியார் 2
ஞானாச்சாரியார்-வரலாறு 2
டார்வின் 2
தஞ்சைப்-பெரிய-கோயில் 3
தத்துவம் 1
தமிழனின்-தவம் 1
தமிழன்தான்-இந்துமதத்-தலைவராக-முடியும் 1
தமிழர்-தாழ்ச்சி 1
தமிழர்-மதம் 3
தமிழின-மொழி-மத-விடுதலை 4
தமிழினப்-பெருமை 1
தமிழிலக்கியம் 1
தமிழே-பூசைமொழி 2
தமிழ்-வளர்த்த-அன்னியர் 1
தமிழ்நாடு-தமிழருக்கே 1
தமிழ்மொழி 4
தமிழ்மொழிப்-பெருமை 1
தாய்நாடு 1
தாய்மொழி 1
திராவிட-இனம் 1
திராவிடர்-கழக-மாநாடு 1
திரு 1
திருப்பதிகள் 1
திருவள்ளுவர் 2
திருவாசகம் 1
திரேதாயுகம் 1
தீர்த்தங்கரர் 1
தென்மதுரை 1
தேவகுமாரர் 2
தேவதூதர் 1
தை-மாதப்-பெருமை 1
தொன்மதுரை 1
நமது-பணிநிலைகள் 1
நரகம் 1
நரகாசுரன் 1
நாட்டுரிமை 1
நாட்டுலகப்-புரட்சி 1
நான்கு-யுகங்கள் 1
நாயனார் 1
பகுத்தறிவுக்-கொள்கை 1
பகுத்தறிவுப்-பணி 2
பஞ்சாங்கம் 1
பட்டறிவு 1
பண்டைய-அரசு 1
பண்பாட்டு-இயக்கம் 1
பதினெட்டாம்படிக்-கருப்புகள் 2
பதினெண்-வேளிர்கள் 1
பதினெண்சித்தர்-பீடம் 1
பதினெண்சித்தர்கள் 6
பத்தாவது-பதினெண்சித்தர்-பீடாதிபதி 1
பந்தள-மன்னன் 1
பரிகாரம் 1
பரிணாம-வளர்ச்சி 1
பாம்புச்-சத்தி 1
பாவம் 1
பிராமணச்-சூழ்ச்சி 3
பிரிவினை 1
பிறாமண-மறுப்பு 1
பிற்காலச்-சோழப்பேரரசு 1
பீடாதிபதி 4
புண்ணியம் 1
புத்தர் 1
புத்தாண்டு-வாழ்த்து 1
புரட்சி 1
பூசைமுறை 1
பெண்-விடுதலை 1
பெரியார் 9
பொய்யான-ஹிந்துமதம் 3
போதனைகள் 2
மகாத்மா-காந்தி 1
மணீசர்கள் 2
மதவழிப்-புரட்சி 1
மனிதப்-பண்பு 1
மரணமிலாப்-பெருவாழ்வு 1
மருதையா-பிள்ளை 1
மறுபிறப்பு 2
மாணிக்கவாசகர் 1
மானுட-நலம் 2
முதல்மொழி 1
முன்னோர்-வழிபாடு 2
முற்பிறப்பு 2
மெய்யான-இந்துமதம் 5
மொழியுரிமை 1
மொழிவழி-இனம் 1
மோட்சம் 1
யோகம் 1
லிங்கம் 1
வட-ஆரியர் 1
விஞ்ஞானம் 1
வேதமதம் 1
ஹிந்துமதம் 14