“… புத்தரும், மகாவீரரும், கபாலிகரும், பைரவரும், காலாமுகப் பைரவரும், சாத்தரும், … எதிர்த்த அல்லது எதிர்த்துப் போரிட்ட பொய்யான, போலியான, பயனில்லாத கற்பனாவாதங்கள் மிக்க அறியாமைகளும், புரியாமைகளும் மிகுந்த ஹிந்துமதம் எப்படி மெய்யான பயன்மிக்க அனைத்து வகைப்பட்ட சத்தி, சித்தி, முத்திகளைத் தரவல்ல இந்துமதத்தை வெல்ல முடிந்தது? இதற்குக் காரணம் தமிழர்களுடைய ஏமாளிப் போக்கா! கோமாளிப் போக்கா! அப்பாவிப் போக்கா! அறியாமைப் போக்கா! வெகுளிப் போக்கா! தான் தோன்றிப் போக்கா! வறட்டுத்தனமான வம்பு வீம்புப் போக்கா! … என்பது புரியவில்லை, புரியவில்லை, புரியவில்லை. … … …”
“… எப்படியெல்லாமோ சிந்தித்துப் பார்க்கிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட அழகிய இனிய தமிழ்ச் சொற்களால் பொருள் விளக்கங்கள் தரப்படுகின்ற பொருளாழமிக்க தூய உயர்தனிச் செந்தமிழ்ச் சொல்லான இந்து என்ற சொல்லை குமரி முதல் இமயம் வரை உள்ள இந்துக்கள் எப்படி மறந்தார்கள்? அல்லது எவ்வாறு மறக்கடிக்கப் பட்டார்கள்? அல்லது ஏன் மறந்தார்கள்? என்ற வினாவிற்கு விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவேயில்லை.”
“இதே நேரத்தில் எவ்விதப் பொருளுமே இல்லாத ‘ஹிந்து’ என்ற ஓர் அந்நிய மொழிச் சொல்லை குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்கள் எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? அல்லது எவ்வாறு ஏற்றுக் கொள்ளும்படிச் செய்யப்பட்டார்கள்? அல்லது ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? என்ற வினாவிற்கும் விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவில்லை, விடை கிடைக்கவேயில்லை….”
“… இந்தக் கலியுகம் பிறந்து சுமார் 1500 ஆண்டுகளுக்குள் (கி.மு.500 வரை) தோன்றிய எந்த ஏடுகளிலும் இந்த ‘ஹிந்து’ என்ற சொல் காணப்படவில்லை. இதேபோல், யாம் செயல்படத் துவங்குவதற்கு சுமார் 500 ஆண்டுகளுக்குள் (கி.மு.500க்கு மேல்) எந்த ஏடுகளிலும் ‘இந்து’ என்ற சொல் அதிகமாக ஆட்சியில் இல்லை. அதாவது ‘ஹிந்து’ என்ற சொல் அதிகமாக ஆட்சியிலும், ‘இந்து’ என்ற சொல் சிலசில இடங்களில் ஆட்சியிலும் காணப்படும் நிலை வந்துவிட்டது. எனவே, இந்த ‘ஹிந்து’ என்ற அன்னிய மொழிச் சொல் வெகு விரிவாகவும், விரைவாகவும் செயல்பட்டே இந்த ‘இந்து’ என்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்ச் சொல்லை ஏட்டுலகிலிருந்தும், நாட்டு நடப்பிலிருந்தும் விரட்டி விரட்டி விலகி ஓடச் செய்து விட்டது, விரட்டி விரட்டி விலகி ஓடச் செய்துவிட்டது, விரட்டி விரட்டி விலகி ஓடச் செய்து விட்டது.”
“அதாவது, ‘ஹிந்து’ என்ற சொல்லுக்குரிய அந்நியர்கள் இந்த ‘ஹிந்து’ என்ற சொல்லையே ஒரு பெரிய படையாகக் கொண்டு ஏட்டுலகிலும், நாட்டு நடப்பிலும் மிகப் பெரிய போர்களைத் தொடர்ந்து நடத்தி; இப்போர்களில் பெற்ற வெற்றிகளின் மூலம் இந்த ‘இந்து’ என்ற சொல்லுக்குரிய தமிழர்களை விரட்டி விரட்டி துரத்தி துரத்தி அடிஅடியென்று அடித்து அச்சமும், கூச்சமும், கோழைப்பண்பும், தன்மானமில்லாத அடிமை மனமும் உடையவர்களாக ஆக்கினர் என்பதே உண்மை.”
“இதனால்தான், தமிழர்கள் மீண்டும் இந்த ‘இந்து’ என்ற அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்ச் சொல்லின் அழகையும், பொருளாழத்தையும், எளிமையையும், தெளிவையும், வலிமையையும், பொலிவையும், தன்மானம் காக்கக் கூடிய ஆற்றலையும், இன உரிமையுணர்வை ஊட்டும் வளத்தையும், மதத்தத்துவச் செழிப்பையும், ஆட்சியையும், மாட்சிமை பெறச் செய்யும் சூழ்ச்சித் திறனையும், தமிழின மொழி நாட்டு வரலாறுகளை விளக்கும் சத்தியினையும் உணர்ந்து மீண்டும் ‘இந்து’ என்ற சொல்லைத் தங்களுடைய ஏட்டுலகிலும், நாட்டு நடப்பிலும் மாட்சிமிக்க ஆட்சி பெறச் செய்யும் விழிச்சிமிகு எழிச்சி நிலையை உருவாக்கும் பணியினைத் துவக்கினோம் யாம்.”
“இதற்காகவே, 48 ஓலைகள் முதல் 108 ஓலைகள் வரையுள்ள ‘குறிப்பேடுகள்’ எனும் பெயரில் நூற்றுக்கணக்கான நூல்களை இந்து மதத்துக்கும், ஹிந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கிக் காட்டுவதற்காக எழுதி ஒவ்வொரு குறிப்பேட்டையும், ஆயிரக்கணக்கில் நகலெடுக்கச் செய்து நாடு முழுதும் அனுப்பும் பணியினைத் துவக்கினோம் யாம். இருந்த போதிலும், எமது முயற்சிகள் சித்திரை மாதத்தில் கொதிக்கும் பாலை நிலத்து மணலில் பாலை ஊற்றிய கதையாக இந்துக்களிடத்தில், குறிப்பாக இந்துமதத்தின் மூலவர்களாகவும், காவலர்களாகவும், வாரிசுகளாகவும், கருவூலங்களாகவும், விதைப் பண்ணைகளாகவும், நாற்றங்கால்களாகவும் இருக்கின்ற நமது தமிழர்களிடம் எவ்விதமான பயனும் ஏற்படவில்லை, ஏற்படவில்லை, ஏற்படவில்லை, ஏற்படவேயில்லை.”
“எனவேதான், அருளை அநுபவப் பொருளாக வழங்கவல்ல அனைத்து வகைப்பட்ட அருளாளர்களும், அருளாளிகளும், அருளாடு நாயகங்களும், மருளாளர்களும், மருளாளிகளூம், மருளாடு நாயகங்களும் தமிழினத்தில் தோன்றித் தோன்றி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில் அருள்மழை பொழியட்டும், அருள்மழை பொழியட்டும், அருள்மழை பொழியட்டும் என்பதற்குரிய ஏற்பாடுகளை தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் விரிவாகச் செய்து செல்லுகிறோம் யாம்…”
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் காலம்: கி.மு.100 முதல் கி.பி.150 வரை
… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.
‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.
தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…
இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.
அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.
இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.
சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.
உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.
சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும்.
பொய்யான ஹிந்துமதத்தில் மேலே கூறிய வரலாற்றுக்கு முரணான செய்திகளை ஆபாசமான முறையில், அறிவுக்குப் பொருந்தாத வகையில் கூறுகிறார்கள்: ‘பிறம்ம தேவன் மடியிலிருந்து நாரதர் தோன்றினார். கட்டை விரலிலிருந்து பிரஜாபதி தோன்றினார். பிராணனிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். தொடர்ந்து பிரம்மனின் சங்கல்பத்தால் அத்ரி, ப்ருகு ஆகிய மஹரிஷிகள் தோன்றினர்.’
பதினெண்சித்தர்கள் உருவாக்கிய நான்கு வேதங்களின் பெயர்களிலும் நான்கு சமசுக்கிருத வேதங்களை உருவாக்கிக் கொண்ட பிறாமணர்கள் முழுக்க முழுக்க தங்களுடைய வேத மதத்தை; அதாவது, பொய்யான ஹிந்து மதத்தை மெய்யான இந்து மதமாகவே மாற்ற முயற்சித்தார்கள். அதற்காக பதினெண்சித்தர்கள் ஏற்படுத்திய வழிபடு நிலையினர்கள், வழிபாட்டு நிலையங்கள், பல்வேறு வகை அருளாளர்கள், பலவகைப் பட்ட அருளுலக நூல்கள், … முதலிய அனைத்தையுமே இருட்டடிப்புச் செய்யவும், குழப்பவும், கலக்கவும், பல புதிய கதைகளையும், புராண இதிகாசங்களையும், போலி நூல்களையும், போலி வரலாறுகளையும் உருவாக்கினார்கள்.
பதினெண்சித்தர்கள் மிகத் தெளிவாக விஞ்ஞானச் சூழலிலும், பகுத்தறிவுப் போக்கிலும், (With a Scientific atmosphere and a Rationaistic Approach) உலகின் தோற்றத்தையும், பயிரின உயிரின தோற்றத்தையும் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதுதான் சித்தர்களின் இந்து மதம். அதாவது, மெய்யான இந்துமதம் என்று சொல்லப் படும் பதினெண்சித்தர்களின் இந்துமதம் முழுக்க முழுக்க அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படக் கூடிய ஒரு சமூக விஞ்ஞானமே; இது ஒரு பகுத்தறிவுத் தத்துவமே; இது ஓர் அறிவியல் மதமே.