Gurudevar.org

இந்து மத எழுச்சியே இந்தியாவின் செழுச்சி!

இந்தியாவின் செழுச்சியே இம்மானுட நல விழிச்சி!

ஞானாச்சாரியாரின் எழுத்துக்களிலிருந்து:

குருதேவர்

‘தமிழ்மொழிதான் சித்தர் நெறியெனும் இந்துமதத்தின் மெய்யான ஆட்சிமொழி’

“… நமக்கு யார் மீதும் மறுப்போ, வெறுப்போ, எதிர்ப்போ, பகையோ இல்லை! இல்லை!! இல்லை!!! இல்லவேயில்லை. நாம் கூற முற்படுவதெல்லாம் இம்மண்ணுலகின் மூலமதமும் முதல் மதமுமான இந்து மதத்தின் வரலாறும், தத்துவமும், சித்தாந்தமும், சாத்திறத் தோத்திறங்களும், அருட்கலைகளும், அருளுலக அறிவியல்களும், அருளுலகச் சான்றோர்களும், ஆன்றோர்களும்…. பற்றிய முழுமையான செய்திகளும் முறையாகக் காலக் கணக்கீட்டு அடிப்படையில் வெளியிடப் பட்டேயாக வேண்டும் என்பதுதான்.

ஏனென்றால் அதன் அடிப்படையில்தான், ‘தமிழர்களுக்குத் தங்களின் முன்னோர்களெல்லாம் முட்டாள்களல்ல’ என்ற பேருண்மை விளங்கிடும். மேலும், ‘தங்களுடைய தாய்மொழியான தமிழ்மொழிதான் அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களின் சித்தர் நெறியெனும் இந்துமதத்தின் மெய்யான ஆட்சிமொழி’ என்ற பேருண்மையும் விளங்கிடும். இப்படித் தமிழர்களுக்குத் தங்களின் மதமான இந்துமதம்தான் இம்மண்ணுலகின் முதல்மதம், மூலமதம் என்ற பேருண்மையும், தங்களுடைய தாய்மொழியான தமிழ்மொழிதான் இம்மண்ணுலகின் முதல்மொழி, மூலமொழி, அருள்மொழி, அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழி என்ற பேருண்மையும் தெளிவாக விளங்கினால்தான், தன்னம்பிக்கையும், தன்மானப் பிடிப்பும், இன உணர்வும், இனப்பற்றும், இன ஒற்றுமையும், மொழிப்பற்றும், மொழி உணர்வும், மொழி உரிமை உணர்வும், மொழி விடுதலை உணர்வும், இன விடுதலை உணர்வும்… முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்திடும்.

அப்பொழுதுதான், அவர்கள் எந்த அன்னியரையும், அன்னிய மொழியையும் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ, பயன்மிக்கதாகவோ, அரியதாகவோ, பெரியதாகவோ நினைக்க மாட்டார்கள்! நினைக்க மாட்டார்கள்! நினைக்கவே மாட்டார்கள்! இப்படிப்பட்ட நினைப்பைத் தமிழர்களுக்கு உருவாக்குவதன் மூலம்தான் அவர்களின் தாழ்ச்சி நிலை தொடர்ச்சி நிலையாக இருந்து வருவதை மாற்ற முடியும்! மாற்ற முடியும்! மாற்ற முடியும்!

தமிழர்கள் தங்களுடைய சமயம்தான் இந்துமதம் என்பதை மறந்தும், துறந்துமே செயல்படுகிறார்கள். அவர்கள் வட ஆரியர்களின் தோற்றத்தையும், பூசைமுறைகளையும், சமசுக்கிருதப் பூசாமொழிகளையும், சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளையுமே மெய்யான இந்துமதத்திற்குரியன என்று தவறாக எண்ணி மயங்குகிறார்கள். இந்த மயக்கத்தால்தான் வட ஆரியச் சூழ்ச்சிகளுக்கு இரையாகித் தாழ்ச்சியுற்றே கிடந்து வருகிறார்கள்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. கி.பி. 785க்குப் பிறகு கருணீக்கச் சைவ வேளாள குலத்தில் தோன்றிய காலடி ஆதிசங்கராச்சாரியார் தமிழராகப் பிறந்திருந்தும், ஒரு வட ஆரியராக விளம்பரப் படுத்தப்பட்டார். அவர் சித்தர் நெறிப்படி வெள்ளாடை மேனியராகவும், உச்சிக் குடுமியாராகவும் வாழ்ந்திட்ட போதும் அவரை வட ஆரிய நெறிக்குட்பட்ட காவி உடை மேனியராகவும், மொட்டைத் தலையராகவும் சித்தரித்து விட்டார்கள். இதனால் தமிழினத்தில் தோன்றிய மாபெரும் ஆச்சாரியார்களில் ஒருவர் வட ஆரியரால் தங்களுக்குரியவராகத் தத்தெடுக்கப் பட்டுவிட்டார்.
இதனால் தமிழினத்திற்கும் மதத்திற்கும் மொழிக்கும் பண்பாட்டிற்கும்….. மிகப்பெரிய நலிவையும், மெலிவையும், நோய்நிலையையும், தேய்நிலையையுமே விளைவித்துக் கொடுத்திட்டார்கள் வட ஆரியர்கள். … …

-சித்தர் காகபுசுண்டர் காக்கா வழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை

முழுமையாகப் படித்திட



நான்வேத வாசகங்கள்

தமிழரே இந்துமத மூலவர்கள்; தமிழரே இந்துமத நாயகங்கள்; தமிழரே இந்துமத வித்துக்கள்; தமிழரே இந்துமதச் சொத்துக்கள்; தமிழரே இந்துமதக் காவலர்கள்; தமிழ்மொழியே கடவுள் மொழி; தமிழ்மொழியே தெய்வமொழி; தமிழ்மொழியே தேவமொழி; தமிழ்மொழியே வேதமொழி.

விரிவாகப் படித்திட...

இந்துவேத மதமே உலக மூலமதம்

வடகோடி இமயத்தின் முடி முதல் தென்கோடி கன்னியாகுமரிக் கடலடி வரை உள்ள அனைத்து கடவுள்களுக்கும் தெரிந்த ஒரே ஒரு மொழி அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியேயாகும். இந்த உலகில் உள்ள அனைத்து வகைப்பட்ட கோயில்களிலும் உள்ள நூற்றியெட்டு வகை (108) திருப்பதிச் சக்கரங்களும், இருநூற்று நாற்பத்து மூன்று (243) வகைச் சத்திபீடச் சக்கரங்களும், ஆயிரத்தெட்டு (1008) வகைச் சீவாலயச் சக்கரங்களும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டவை! எழுதப்பட்டவை!! எழுதப்பட்டவை!!!

விரிவாகப் படித்திட...

தமிழருக்கு மட்டும் தாழ்ச்சி ஏன்?

இம்மண்ணுலகிலுள்ள எல்லா இனத்தவர்களும் வரலாற்றுப் போக்கிலே உயர்ச்சியையும், தாழ்ச்சியையும்; வெற்றியையும், தோல்வியையும்; உரிமை வாழ்வையும், அடிமை வாழ்வையும்; … மாறி மாறித்தான் பெற்றுள்ளார்கள். ஆனால், இந்தத் தமிழர்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாகப் பெற்றிட்ட மிகப்பெரிய சமய சமுதாய வீழ்ச்சியிலிருந்து மீட்சியே பெறவில்லை; உயர்ச்சியே அடையவில்லை. சங்ககாலத் தனியரசுகள், பிற்காலச் சோழப் பேரரசு, பிற்காலப் பாண்டியப் பேரரசு, … என்று விரல்விட்டு எண்ணக் கூடியவைதான் தமிழரின் அரசியல் வெற்றிக்குச் சான்றாக இருக்கின்றன. அதுவும் இந்த ஒருசில தமிழினப் பேரரசுகளின் காலத்திலும், தமிழ்மொழி மதத்துறையில் உரிமையையும் பெருமையையும் இழந்து தீண்டாமை நிலையையே பெற்றிருந்தது. அதாவது, தமிழினப் பேரரசுகளின் காலங்களிலும் சமசுக்கிருதம்தான் மதத்துறையில் ஆட்சியும் உயர்ச்சியும் உரிமையும் பெருமையும் பெற்று விளங்கிடும் மொழியாக இருந்திட்டது.

விரிவாகப் படித்திட...

திருவாசக முன்னுரை

தேவாரம் பாடிய நால்வரில் மறவேள்வி நடத்தி சித்தர் நெறியான இந்துமதத்தை மீண்டும் இம்மண்ணில் நிலைநாட்டிய ‘திருஞானசம்பந்தர்’ வட ஆரியரல்ல என்ற பேருண்மையையும்; அத்வைதத்தை உருவாக்கிய ‘ஆதிசங்கரர்’ அவர்களும் வட ஆரியரல்ல! தமிழரே! என்ற பேருண்மையையும் தமிழர்கள் முதற்கண் உணர வேண்டும். ஞானசம்பந்தர் திருநாவுக்கரசரின் ஆசியோடு புறப்பட்டு; சைவமதமாம் சித்தர் நெறியின் உண்மைகளை நிலைநாட்டிட மதுரை மாநகர் சென்று சமணர்களுடன் அனல்-புனல் வாதத்தில் வென்றார். தோற்ற சமணர்கள் தாங்களாகவே மனம் இறுகி கழுவில் ஏறி இறந்தனரே அன்றி! வட ஆரியர்கள் கூறுவது போல் சம்பந்தரோ, பாண்டிய மன்னனோ சமணர்களைக் கழுவில் ஏற்றவில்லை.

விரிவாகப் படித்திட...

குருவாக்கியங்கள்

… … குமரி முதல் இமயம் வரையுள்ள இந்துக்களில் பல்வேறு மொழியினர்களும், பல்வேறு இனத்தவர்களும் இருந்த போதிலும் எல்லா இந்துக்களும் புரிந்து கொள்ளக் கூடிய சில குருவாக்கியங்களை இங்கு குறிப்பிடுகிறோம். இந்தக் குருவாக்கியங்களாவது தமிழ்மொழிக்கும் இந்துவேதத்துக்குமுள்ள இணைப்பையும், பிணைப்பையும் தமிழர்களுக்காவது உணர்த்தட்டும், உணர்த்தட்டும், உணர்த்தட்டும் என்ற அறிவிப்பை வழங்கியே இந்துமதம் எப்படியாவது என்றைக்காவது ஹிந்துமதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் படுவதற்குரிய பணிகளைத் தொடருகிறோம் இந்துமதத் தந்தையாகிய யாம்!!!… - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

தமிழனைத் தமிழனாக்குவது

‘தமிழனைத் தமிழனாக்குவதே சிறந்த தவம்’, … … இப்படி குருவாசகங்களை கணக்கற்று எல்லாக் குறிப்பேடுகளிலும் குருபாரம்பரியத்திலும் எழுதிச் செல்லுகிறோம் யாம். இவற்றின் மூலமாவது கணக்கற்றோரின் முயற்சியால் என்றாவது ஒருநாள் தமிழன் தமிழனாக்கப்படுவான். அப்படி, தமிழன் தமிழனாக்கப் பட்ட பிறகுதான் இந்துவேதம் வளவளர்ச்சியையும், ஆட்சிமீட்சியையும் பெற்றிடும். அதையொட்டியே, இந்துமதம் மறுமலர்ச்சி பெற்றிடும், ஆட்சிமீட்சி பெற்றிடும். - பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதியின் எழுத்துக் குவியல்களிலிருந்து சில.

விரிவாகப் படித்திட...

ஞானாச்சாரியார் கருத்துக்கள்

தமிழ்மொழியில்தான் எல்லா கோயில்களிலும் பூசை செய்ய வேண்டும், அருட்சினை செய்ய வேண்டும். அப்படி தமிழ்மொழியில் பூசை செய்யாததால்தான் இந்துக் கோயில்கள் பாழடைந்தன. இந்துக்கள் மாற்றுமதக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்…

விரிவாகப் படித்திட...

இராமகிருட்டிணரியம்

இராமகிருட்டிணர் வாழ்ந்த மெய்யான இந்துமத வாழ்வும், அவர் போதித்த மெய்யான இந்துமதத் தத்துவமும் ஒருங்கிணைந்த இராமகிருட்டிணரியம் (அல்லது இராமகிருட்டிணரியல் = The Ramakrishnarism) மீண்டும் உடனடியாக இந்தியா முழுவதும் முளைத்துக் கிளைத்துத் தழைத்துச் செழித்து வளர வேண்டும்.

விரிவாகப் படித்திட...

மணு தரும சாத்திரம்

அனாதிசிவனார், இளமுறியாக் கண்டத்தில் இருந்த எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மதங்களை சமாதானப் படுத்தவும், சமநிலைப் படுத்தவும், ஒருநிலைப் படுத்தவும், ஒற்றுமைப் படுத்தவும் முயற்சிக்கும் சாதனங்களாக ‘மணுநீதி நூல்கள் பதினெட்டை’ அருளினார்கள்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - I

இந்து மதம், ஹிந்து மதம் - இது என்ன புதுக் குழப்பம்? என்று திகைக்க வேண்டாம். இக்கட்டுரையினை அனைவரும் படித்துணரும் போது ஆரியர்களின் பொய்யான ஹிந்துமதத்தை உணர்வர். பகுத்தறிவும், பயனுமுடைய பதினெண்சித்தர்களின் உண்மையான இந்து மதம் அனைவருக்கும் தெரிய வரும்.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - II

சூழ்ச்சியும், சூதும், வாதும், வஞ்சகமும், சுரண்டலும், ஏமாற்றும், மோசடியும் … செய்யும் துணிச்சல் மிக்க பிறாமணர்கள் பதினெண்சித்தர்களின் ஆகம விதிகளை மீறி ஒன்பது (9) கோள்களையும் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய வழிபாட்டுநிலையங்களில் பல திசைகளைப் பார்த்துக் கொண்டு நிற்கக் கூடிய கூட்டமைப்புப் பீடமாக மாற்றினார்கள். … இதனால் பதினெண்சித்தர்கள் உருவாக்கிய அருள் நிலையங்கள் அனைத்தும் பாழ்பட்டன, செயலிழந்தன. அதனால் பிறாமணர்கள் தங்கள் விருப்பம்போல் பூசாறியாக, குருக்களாக, பண்டாரமாக, தேசிகராக, ஓதுவராக, பட்டராக … மாறிக் கொண்டார்கள்! மாறிக் கொண்டார்கள்!! மாறிக் கொண்டார்கள்!!!.

விரிவாகப் படித்திட...

ஹிந்துமதம் பொய்யானது - III

உண்மையான இந்துமதப்படி அண்டங்களும், பேரண்டங்களும், அண்டபேரண்டங்களும் இயற்கையாகத் தோன்றின, இவைகளில் 108 திருப்பதி அண்டங்களிலும், 243 சத்தி அண்டங்களிலும், 1008 சிவாலய அண்டங்களிலும்தான் மனிதன் வாழ்கிறான். இந்த மண்ணுலகில் பிறப்பவைகளுக்கு உரிய பணிகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுமாறு செயல்பட்டவரே பிறமண் (பிற = பிறப்பிற்குரிய, மண் = இம்மண்ணுலகில்). எனவே பிற + மண் = பிறமண் என்றால் இம்மண்ணுலகில் பிறக்கக் கூடியவைகளைப் பற்றிய பணிகளைக் கவனிப்பவர் என்றுதான் பொருள். இவரும் ஒரு சித்தரே.

விரிவாகப் படித்திட...




கருத்துச் சொற்கள்

10வது பதினெண்சித்தர் பீடாதிபதி 2
caste system 1
divine healing 1
mystical healing 1
theory of re-incarnation 1
அன்புச் சேவுக 28
அமாவாசை விரதம் 1
அரசயோகி 1
அரசியல் புரட்சி 1
அரசியல் மாற்றம் 1
அரசியல் வரலாறு 1
அருட்கணிப்பு 1
அருட்சித்தருக்கு அறிவுரை 1
அருட்பணி 1
அருட்புரட்சி 1
அருட்போர் 1
அருணகிரிநாதர் 1
அருளாட்சி அமைப்பு 5
அருளாட்சி ஆணைகள் 13
அருளாட்சிக்கு அழைப்பு 1
அருளாளன் 1
அருளுரை 1
அருள் 1
அருள்வாக்கு 1
அவதாரம் 1
ஆசனம் 1
ஆதிசங்கரர் 10
ஆன்மீகம் 1
ஆரிய மாயை 1
ஆலயம் 1
இ.ம.இ. கொள்கைகள் 1
இந்திமொழி வெறியர்கள் 1
இந்தியா 1
இந்தியாவின் மதம் 1
இந்தியாவை ஆளவேண்டிய தத்துவம் 1
இந்து 1
இந்துத் தத்துவம் 1
இந்துமத ஆண்டு 1
இந்துமத மூலநூல்கள் 1
இந்துமத மூலவர்கள் 1
இந்துமதம் 18
இந்துவேத மதம் 1
இந்துவேத மாநாடுகள் 1
இந்துவேதம் 2
இராசராச சோழன் 2
இராசிவட்டக் கருவூறார்கள் 1
இராமகிருட்டிணர் பரம அம்சர் 1
இராமன் 2
இறவாயாக்கை 1
இலக்கிய வரலாறு 1
இளமுறியாக் கண்டம் 1
உயிரணு 1
உருவ வழிபாடு 1
உலக அருளாளர்கள் 1
உலக இனங்களின் விடுதலை 1
உலக மதங்கள் 2
உலக வரலாறு 1
உலகமொழிகளின் விடுதலை 1
ஊழ்வினை 1
எந்த மானுடம் இந்த மானுடம் 3
ஏசுநாதர் 1
ஏட்டறிவு 1
ஏட்டுலகப் புரட்சி 1
ஐந்தரம் 1
ஐயனார் 1
ஐயப்பன் 1
ஒற்றுமை 1
ஒளி வணக்கம் 1
ஓகம் 1
ஓகாசனம் 1
கடவுளர் வடிவம் 1
கடவுள் 1
கடவுள்மொழி 1
கருவூரார் 1
கருவூறார் 2
காகிதப் போர் 1
காயத்திரி 5
காயந்திரி 7
காலக் கணக்கீடு 1
காவல் தெய்வம் 2
காவிரியாற்றங்கரைக் கருவூறார் 1
கீதை 1
குமரிக் கண்டம் 1
குரு 2
குருதிப்பலி 4
குருதேவர் 1
குருதேவர் எழுதிய கடிதங்கள் 1
குருதேவர் யார் 14
குருபாரம்பரியம் 1
குருவாக்கியங்கள் 1
குருவாக்கு 1
குலதெய்வங்கள் 1
கோயில் 1
கோயில் உயிர்ப்பு 1
கோயில் நிருவாகம் 1
கோயில் புத்துயிர்ப்பு 1
கோயில் வழி அருளாட்சி 1
சங்க கால இலக்கியங்கள் 1
சத்தி இலிங்கம் 1
சத்தி பீடங்கள் 1
சந்தானாச்சாரியார்கள் 1
சனாதன தருமம் 1
சபரி 3
சமசுகிருதம் 1
சமய மறுமலர்ச்சி 1
சமய வரலாறு 1
சமுதாயத் தத்துவம் 1
சமுதாயப் புரட்சி 1
சாதிகள் 4
சித்தர் ஏளனம்பட்டியார் 2
சித்தர் கருவூறார் 2
சித்தர் காகபுசுண்டர் 1
சித்தர் நெறி 7
சித்தர் மணு 1
சித்தாந்தம் 1
சித்தி 1
சிவ இலிங்கம் 1
சிவநெறி 2
சிவராத்திரி 1
சிவாலயங்கள் 1
சுவாமி கைவல்யம் 1
சேரர்கள் 1
சைவசமய சித்தாந்தம் 1
சொல்லடி நாயனார் 2
சோதிடம் 1
சோழநாடு 1
ஜாதிவெறி 1
ஞானக்காட்சி 1
ஞானாச்சாரியார் 2
ஞானாச்சாரியார் வரலாறு 2
டார்வின் 2
தஞ்சைப் பெரிய கோயில் 3
தத்துவம் 1
தமிழனின் தவம் 1
தமிழன்தான் இந்துமதத் தலைவராக முடியும் 1
தமிழரின் தாழ்ச்சி 1
தமிழர் தாழ்ச்சி 1
தமிழர் மதம் 3
தமிழின மொழி மத விடுதலை 4
தமிழினப் பெருமை 1
தமிழிலக்கியம் 1
தமிழே பூசைமொழி 2
தமிழ் வளர்த்த அன்னியர் 1
தமிழ்நாடு தமிழருக்கே 1
தமிழ்மொழி 4
தமிழ்மொழிப் பெருமை 1
தாய்நாடு 1
தாய்மொழி 1
திராவிட இனம் 1
திராவிடர் கழக மாநாடு 1
திரு 1
திருஞானசம்பந்தர் சாதனை 2
திருப்பதிகள் 1
திருவள்ளுவர் 2
திருவாசகம் 1
திரேதாயுகம் 1
தீர்த்தங்கரர் 1
தென்மதுரை 1
தேவகுமாரர் 2
தேவதூதர் 1
தை மாதப் பெருமை 1
தொன்மதுரை 1
நமது பணிநிலைகள் 1
நரகம் 1
நரகாசுரன் 1
நாட்டுரிமை 1
நாட்டுலகப் புரட்சி 1
நான்கு யுகங்கள் 1
நான்வேத வாசகம் 1
நாயனார் 1
பகுத்தறிவுக் கொள்கை 1
பகுத்தறிவுப் பணி 2
பஞ்சாங்கம் 1
பட்டறிவு 1
பண்டைய அரசு 1
பண்பாட்டு இயக்கம் 1
பதினெட்டாம்படிக் கருப்புகள் 2
பதினெண் வேளிர்கள் 1
பதினெண்சித்தர் பீடம் 1
பதினெண்சித்தர்கள் 6
பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி 1
பந்தள மன்னன் 1
பரிகாரம் 1
பரிணாம வளர்ச்சி 1
பாம்புச் சத்தி 1
பாவம் 1
பிராமணச் சூழ்ச்சி 3
பிரிவினை 1
பிறாமண மறுப்பு 1
பிற்காலச் சோழப்பேரரசு 1
பீடாதிபதி 4
புண்ணியம் 1
புத்தர் 1
புத்தாண்டு வாழ்த்து 1
புரட்சி 1
பூசைமுறை 1
பெண் விடுதலை 1
பெரியார் 9
பொய்யான ஹிந்துமதம் 3
போதனைகள் 2
மகாத்மா காந்தி 1
மணீசர்கள் 2
மதவழிப் புரட்சி 1
மனிதப் பண்பு 1
மரணமிலாப் பெருவாழ்வு 1
மருதையா பிள்ளை 1
மறுபிறப்பு 2
மாணிக்கவாசகர் 1
மானுட நலம் 2
முதல்மொழி 1
முன்னோர் வழிபாடு 2
முற்பிறப்பு 2
மெய்யான இந்துமதம் 5
மொழியுரிமை 1
மொழிவழி இனம் 1
மோட்சம் 1
யோகம் 1
லிங்கம் 1
வட ஆரியர் 1
விஞ்ஞானம் 1
வேதமதம் 1
ஹிந்துமதம் 14